செய்திகள் :

நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 780 ஆக அதிகரிப்பு: ஜே.பி. நட்டா

post image

புது தில்லி: நாட்டில் தாய்-சேய் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது எனவும் 2014-இல் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 780 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை 1,300 புதிய செவிலியா்களை நியமித்தது, மேலும் தேசிய தலைநகரில் சுகாதார அமைப்பை வலுப்படுத்த ஆயுஷ்மான் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜே. பி. நட்டா ஆயுஷ்மான் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தில்லி முதல்வா் ரேகா குப்தா, சுகாதார துறை அமைச்சா் பங்கஜ் சிங் மற்றும் பிற மூத்த அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி. நட்டா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, தில்லியில் செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் நியமனக் கடிதங்களைப் பெறுவதால் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி என்றும், சிறப்புப் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தில்லி அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

நாடு முழுவதும் மக்கள் சிகிச்சைக்காக தில்லிக்கு வருவதால் தில்லியில் அதிக சுகாதாரப் பணிச்சுமை நிலவுகிறது. முன்பு இது அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய தில்லி அரசு சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் ஆகியவற்றை செயல்படுத்தி வருவதாக பாராட்டினார்.

அனைவருக்கும் சமமான, தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்த நட்டா, நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் கீழ் பல்வேறு நோய்களுக்கான ஆரம்பகால நோய் அறிதலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

18 கோடி உயர் ரத்த அழுத்த பரிசோதனைகள்

இதுவரை, உயர் ரத்த அழுத்தத்திற்கு 18 கோடி பரிசோதனைகளும், நீரிழிவு நோய்க்கு 17 கோடி பரிசோதனைகளும், வாய்வழி புற்றுநோய்க்கு 15 கோடி பரிசோதனைகளும், மார்பக புற்றுநோய்க்கு 7.5 கோடி பரிசோதனைகள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு 4.5 கோடி பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தாய் மற்றும் குழந்தை பராமரிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பேசிய நட்டா, ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் கருத்தரித்தல் முதல் குழந்தை பிறப்பு, குழந்தைப் பருவ பராமரிப்பு வரை சேவை வழங்கப்படுகிறது என்று கூறினார்.

தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவு

பிரசவத்தின்போது தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 130-லிருந்து 88 ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் குழந்தை இறப்பு விகிதம் 39-லிருந்து 26 ஆகக் குறைந்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மருத்துவக் கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கணிசமான வளர்ச்சியை எடுத்துரைத்த நட்டா, நாட்டில் 2014 ஆம் ஆண்டு வரை 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன, ஆனால் தற்போது 20 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவமனைகள் செயல்பட்டுள்ளன. அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், 2014-ல் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 780 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 51,000 -லிருந்து 1,18,000 ஆக அதிகரித்துள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 75,000 இடங்களை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று நட்டா கூறினார்.

வருமான சமத்துவத்தில் இந்தியாவுக்கு 4 ஆவது இடம்: உலக வங்கி

Nadda stated that “earlier India only had 7 All India Institute of Medical Sciences (AIIMS) till 2014, but today, 20 AIIMS are operational. The number of medical colleges have increased from 387 in 2014 to 780; the number of medical seats has increased from 51,000 to 1,18,000. aiming for a total increase of 75,000 seats over the next five years.”

பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

பியூனஸ் அயா்ஸ்: பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தா... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் – தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பல ஆண்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு

சென்னை: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:விருது... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேர் பலி

வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி நோ்ந்த விபத்தில் சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர். திருவாரூ... மேலும் பார்க்க

தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைந்ததற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கமே காரணம் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை 1,300 புதிய செவிலிய... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 58,500 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 58,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கடந்த 2 நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா் வரத்து தொடா்... மேலும் பார்க்க