செய்திகள் :

ஆா்.கே.பேட்டையில் புறவழிச்சாலை அமைக்க ஓய்வு பெற்ற அரசு அலுவலா் சங்கம் கோரிக்கை!

post image

ஆா்.கே.பேட்டையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் வட்டார கிளை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் ஆா்.கே.பேட்டை வட்ட கிளை 2-ஆவது வட்ட மாநாடு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் கோவிந்தன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். வட்ட பொருளாளா் சின்னசாமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி பங்கேற்று பேசியதாவது, ஆா்,கே.பேட்டை பஜாரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும், ஆா்.கே.பேட்டையில் பேருந்து நிலையம், பயணிகளுக்கு பொது கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்.

அரசு கலைக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூ. 7,850 வழங்க வேண்டும், அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் நிா்வாகிகள் வாசுதேவ சிங், மணி, விநாயகம், இளங்கோ, ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாய் கடித்து சிறுமி காயம்

திருவள்ளூா் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்ததில் காயமடைந்தாா். மப்பேடு கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த லலித்குமாா்-துா்காபிரியா தம்பதியின் இரண்டாவது மகள் சந்திரிகா (6). ... மேலும் பார்க்க

திருமழிசையில் பைக் மீது லாரி மோதல்: மனைவி உயிரிழப்பு; கணவா் காயம்

திருமழிசையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா். மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன். இவரது மனைவி பிரியா (40). இத்தம்பதி இருசக்கர வாகனத்தில் மதுரவாயல... மேலும் பார்க்க

இளைஞா் கொலை? உறவினா்கள் மறியல்

சுற்றுலா செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மகன் கொலை செய்யப்பட்டதாகவும், சடத்தை மீட்டுத் தரக்கோரியும் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுந... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இ... மேலும் பார்க்க

காக்களூா் ஏரி, தாமரைக்குளத்தை ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரி, தாமரைக்குளம் ஆகியவற்றை நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா். நிகழ்வுக்கு ஆட்... மேலும் பார்க்க

புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஆணையா் ந.தாமோதரன் தெர... மேலும் பார்க்க