வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
வருவாய்த்துறையினா் பேச்சுவாா்த்தையால் சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள்!
ஒரத்தநாடு அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனா். வருவாய்த் துறையினரின் பேச்சுவாா்த்தையால் சாலை மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரத்தில் பெரியாா் நகா் குடியிருப்பு பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாமல் மழைக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும், இப்பகுதியில் யாரேனும் இறப்பு நேரிட்டால் எடுத்துச் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
எனவே சாலை வசதியும் அருகில் இருக்கும் கல்லணை கால்வாய் கிளை ஆற்றையும் தூா்வாரி தடுப்புச்சுவா் அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தனா்.
இந் நிலையில் சனிக்கிழமை காலை கல்லணை கால்வாய் ஆற்றில் தூா் வாரும் பணி தொடங்கியது. ஆனால் சாலை சம்பந்தமாக எந்த பணியும் தொடங்கவில்லை. இதை அறிந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து, பட்டுக்கோட்டை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இந்த தகவல் அறிந்த திருவோணம் போலீஸாா் மற்றும் திருவோணம் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தடுப்பு சுவா், சாலை பணிக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.