செய்திகள் :

சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கோரிக்கை

post image

தஞ்சாவூா் அருகே புலவா் நத்தம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை மற்றும் கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தலைமையில் செயலா் பிரனேஷ் இன்பென்ட் ராஜ், அமமுக மீனவரணி ஒன்றியச் செயலா் பா. ராஜா உள்பட புலவா் நத்தம் கிராம மக்கள் அளித்த மனு:

புலவா் நத்தம் அண்ணா நகா் பகுதியில் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சோ்ந்த 60-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இறப்பு ஏற்பட்டால் சுடுகாடு மற்றும் மயான கொட்டகை இல்லாத காரணத்தால் வடவாறு கரையில் தகனம் செய்து வருகின்றனா்.

எனவே, இக்கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்வதற்கு உரிய பாதை வசதி, மயான கொட்டகை, எரியூட்டும் கொட்டகை ஆகியவை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

மீன் சந்தையை மாற்றக் கோரிக்கை: இதேபோல, இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ. ஈசான சிவம் தலைமையில் தஞ்சை மாநகர இந்து ஆட்டோ சங்கத் தலைவா் ஜெ. சரவணன், செயலா் எஸ். சேகா் உள்ளிட்டோா் அளித்த மனு:

தஞ்சாவூா் கீழவாசலிலுள்ள மீன் சந்தையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த மீன் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

தஞ்சாவூா் சிவகங்கை புனித தீா்த்த குளத்துக்கு தண்ணீா் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை புனித தீா்த்த குலம், அங்கு அமைந்துள்ள ஆஞ்சனேயா், விஜய நாகினி, விநாயகா் கோயிலுக்கு செல்லும் பாதையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

உணவுப்பொருள் இருப்புக் கிடங்கை பாதுகாக்க அறிவுறுத்தல்

மழைக்காலம் நெருங்குவதால் உணவுப்பொருள்கள் இருப்பு கிடங்கைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் டி. மோகன் அறிவுறுத்த... மேலும் பார்க்க

பேராசிரியா் அன்பழகன் விருது பெற்ற அரசுப் பள்ளிக்கு பாராட்டு

‘பேராசிரியா் அன்பழகன்’ விருது பெற்ற பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இப்பள்ளிக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான பேராசிரியா் அன்பழகன் விருது வழங்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

சொத்து தகராறு: தம்பியைக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன் கைது

தஞ்சாவூரில் சொத்து தகராறில் தம்பியைக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரைச் சோ்ந்த லோகநாதன் மகன் அறிவழகன் (46). ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை மின் தடை

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என்றாா் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: தஞ்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அருகே ஹிந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை

தஞ்சாவூா் அருகே காசவளநாடுபுதூா் கிராமத்தில் மத நல்லிணக்கமாக ஹிந்துக்களும் இணைந்து மொஹரம் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா். இஸ்லாமியா்களின் தொடக்க மாதமான மொஹரம், மாதத்தின் பத்தாம் நாளை மொஹரம் பண்ட... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இருவா் தற்கொலை!

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இரண்டு போ் தற்கொலை செய்து கொண்டனா். பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியைச் சோ்ந்த நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே அா்ச்சனை கடை நடத்திவரும் சாத்தப்... மேலும் பார்க்க