செய்திகள் :

முச்சதம் விளாசி வரலாறு படைத்த வியான் முல்டர்!

post image

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி வரலாறு படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூலை 6) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்க அணியில் அந்த அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி அசத்தினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 334 பந்துகளில் 367* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேவிட் பெடிங்ஹம் 82 ரன்களும், லுஹான் டி பிரிட்டோரியஸ் 78 ரன்களும் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் 367* ரன்கள் குவித்தன் மூலம், தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் தனிநபராக அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பாக, ஹாசிம் ஆம்லா டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் 311* ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் அதிகபட்சமாக இருந்தது. அதேபோல, டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் 350 ரன்களுக்கும் அதிகமாக குவித்த 7-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் தனிநபராக அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பாக, கடந்த 1958 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் பாகிஸ்தான் வீரர் ஹனிஃப் முகமது 337 ரன்கள் எடுத்திருந்ததே டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் தனிநபர் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கிரீம் ஸ்மித் 362 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

South African captain Wiaan Mulder has created history by scoring a triple century.

இதையும் படிக்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை சமர்ப்பித்த ஆகாஷ் தீப்!

2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஜிம்பாப்வே ஃபாலோ ஆன்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டா... மேலும் பார்க்க

பும்ராவை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: இங்கிலாந்து பயிற்சியாளர்

ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தயாராக வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்... மேலும் பார்க்க

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை சமர்ப்பித்த ஆகாஷ் தீப்!

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது சகோதரிக்கு ஆகாஷ் தீப் சமர்ப்பித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுடன் (ஜூலை 6) நிறை... மேலும் பார்க்க

டிஎன்பிஎல்: முதல்முறையாக மகுடம் சூடிய திருப்பூர் தமிழன்ஸ்!

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி மகுடம் சூடியது.திண்டுக்கல்லில் இன்று(ஜூலை 6) மாலை தொடங்கிய டி.என்.பி.எல். இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் சாம்பியன் யார்? திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 221 ரன்கள் இலக்கு!

திண்டுக்கல்: தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மகுடம் சூட திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இன்று(ஜூலை ... மேலும் பார்க்க