செய்திகள் :

தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன்

post image

தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தின் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தின் இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி வாகன பவனி மேற்கொண்டார். இதில் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் உள்ளிட்டோர் வாகனத்தில் இருந்தனர்.

அப்போது சுற்றுப்பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து நயினார் நாகேந்திரன் பேசினார்.

உரையின் தொடக்கத்தில் வாகனத்தில் இருந்தவர்கள், தொண்டர்கள் என பலரையும் குறிப்பிட்டு உரையைத் தொடங்கினார். அப்போது, நாளைய முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற இயக்கத்தில் அனைவரும் இணைந்திருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா உடன் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க | திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52% உயர்வு: இபிஎஸ்

BJP state president Nainar Nagendin has referred to Edappadi Palaniswami as the future Chief Minister of Tamil Nadu.

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52% உயர்வு: இபிஎஸ்

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர... மேலும் பார்க்க

அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

அரசு சார்பில் பிறப்பிக்கப்படும் அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,நான்கு மணி நேரம்... மேலும் பார்க்க

தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை இன்று(ஜூலை 7) வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 3,268 கி.மீ. சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவ... மேலும் பார்க்க

கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!

கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர... மேலும் பார்க்க

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், ம... மேலும் பார்க்க