செய்திகள் :

தஞ்சாவூர்: ”கடை வாடகை பணம் பிரிப்பதில் தகராறு”- தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அண்ணன் கைது!

post image

தஞ்சாவூர், கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் அறிவழகன் (வயது 46), திருவேங்கடம் (41). இருவரும் சகோதரர்கள். திருமணம் ஆன அறிவழகன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். திருவேங்கடத்திற்கு திருமணம் ஆகவில்லை. சகோதரர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுதல், கூலி வேலை என இருவரும் கிடைத்த வேலைக்கு சென்றுள்ளனர். மேலும் இவர்களுக்கு சொந்தமாக கடை ஒன்று இருந்துள்ளது.

murder

அந்த கடையை வாடகைக்கு விட்டுள்ளனர். மாதந்தோறும் வரும் வாடகை பணத்தை இருவரும் பிரித்து எடுத்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல் கடை வாடகை வந்துள்ளது. வீட்டில் மது குடித்த இருவரும் போதையில் இருந்துள்ளனர். அப்போது வாடகை பணத்தை பங்கு போட்டுள்ளனர்.

வாடகை பணத்தை சரி சமமாக பிரிக்கவில்லை என திருவேங்கடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியுள்ளது. அப்போது வீட்டில் கிடந்த கட்டையை எடுத்த அறிவழகன் தன் தம்பி திருவேங்கடத்தை தாக்கியுள்ளார். ரத்தவெள்ளத்தில் சரிந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அறிவழகன் தலைமறைவாகி விட்டார்.

கைது
கைது

இந்த நிலையில், இவர்களது தாயும் மற்றொரு சகோதரரரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது திருவேங்கடம் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த் போலீஸ் திருவேங்கடம் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உடற்கூறாய்வு செய்ய வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அறிவழகனை கைது செய்ததுடன் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழைய நாணயம், சாக்குமூட்டையில் ரூ.2 கோடி: பணத்தாசை காட்டி மோசடி செய்ததால் 65 வயது முதியவர் தற்கொலை

நாடு முழுவதும் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு ஒருவர் சைபர் குற்றவாளிக... மேலும் பார்க்க

பதின்பருவ மாணவர் மர்ம மரணம்; தன்பாலின உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமா? - இளைஞரிடம் போலீஸார் விசாரணை

மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவர் காலை வெளியே சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இரவும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தனது மகனை பல இடங்களில் தேடினர். அந்த மாணவர், அ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் நெருக்கம்; ஹோட்டலுக்கு சென்ற இளைஞரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. 21 பேர் கைது!

டேட்டிங் செயலி மூலம் ஆண், பெண் அறிமுகமாகி நண்பர்களாகின்றனர். இந்த நட்பு சில நேரத்தில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. இந்த டேட்டிங் ஆப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்... மேலும் பார்க்க

`அன்று அதை விரும்பவில்லை, கட்டாயபடுத்தி உறவுகொண்டதால்...' - புனே பாலியல் புகாரில் திருப்பம்

புனே கொண்ட்வா பகுதியில் கடந்த வாரம், புதன்கிழமை கூரியர் கொண்டு வந்த நபர் தனியாக இருந்த 22 வயது பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார்... மேலும் பார்க்க

கரூர்: வழக்கறிஞரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகி கைது; மா.செ காட்டம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கிரிப்ஸ்சன் என்பவர் கரூர் கோதூர் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக, கரூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜா என்ற நில தரகரிடம் முன்பணமாக, ரூ.96 லட்சம் கொடுத்து... மேலும் பார்க்க

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அடுத்தக்கட்ட விசாரணை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் ... மேலும் பார்க்க