செய்திகள் :

இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

post image

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயிலின் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றுகையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டு செல்வப்பெருந்தகை தடுக்கப்பட்டிருக்கிறார். 'இது 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை!' என செல்வப்பெருந்தகை ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.

செல்வப்பெருந்தகை பேசியதாவது, 'திருச்செந்தூர் முருகர் கோயிலின் குடமுழுக்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். அங்கு அதிகாரிகளும் அமைச்சர்களும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். அதிகாரிகள் இங்கே மெத்தனப் போக்கை கடைப்பிடித்திருக்கின்றனர்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

யார் யார கட்டுப்படுத்துறதுன்னு புரியாம இருக்காங்க. 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இது. ஒரே இரவில் போக்கி விட முடியாது. சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிற முதல்வருக்கும் அறநிலையத்துறை அமைச்சருக்கும் எந்த களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மக்களோடு மக்களாக நின்று தரிசித்துவிட்டு வந்தேன். இறைவனை கூட பார்க்க முடியவில்லை. தமிழிசையை ஏன் அனுமதித்தார்கள், என்னை ஏன் தடுத்தார்கள்? என புரியவில்லை. அதிகாரிகள் அதிகாரிகளாக மட்டுமே இருக்க வேண்டும். அதுதான் பிரச்னை.' என்றார்.

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!' - தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி ச... மேலும் பார்க்க

ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள்... மேலும் பார்க்க

``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு" என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னி... மேலும் பார்க்க

'நான் யாருன்னு தெரியல?' - திடீரென விசாரித்த அமைச்சர்... தெரியாமல் விழித்த அரசு பேருந்து ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீச... மேலும் பார்க்க

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

'திருச்செந்தூர் குடமுழுக்கு!'திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப... மேலும் பார்க்க