செய்திகள் :

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!' - தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி

post image

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி சேதப்படுத்தினர். எனவே மராத்தி பெயரில் வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்து இருந்தார். மராத்தி பிரச்னையில் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இணைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, தாக்கரே சகோதரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக துபே அளித்த பேட்டியில், ``நீங்களா மராத்தி பேச ஆரம்பித்தீர்கள். யார் பிரெட்டை நீங்கள் சாப்பிடுகிறீர்கள். எங்களது பணத்தில் மகாராஷ்டிரா வாழ்கிறது. டாடா முதலில் பீகாரில் தான் தொழிற்சாலை அமைத்தது. நீங்கள் என்ன வரி கட்டுகிறீர்கள். உங்களிடம் தொழிற்சாலைகள் இருக்கிறதா?. எங்களிடம் சுரங்கங்கள் இருக்கிறது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கரில் சுரங்கங்கள் இருக்கிறது. உங்களிடம் சுரங்கம் இருக்கிறதா?. ரிலையன்ஸ் குஜராத்தில் ஆயில் சுத்திகரிப்பு தொழிற்சாலையை தொடங்கி இருக்கிறது. செமிகண்டக்டர் உட்பட அனைத்து தொழிற்சாலைகளும் குஜராத் வருகிறது.

இந்தி பேசும் எங்களை கொலை செய்யும் உங்களுக்கு துணிச்சல் இருந்தால் உருது பேசும் மக்களை கொலை செய்து பாருங்கள். துணிச்சல் இருந்தால் பீகார், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் செல்லுங்கள். உங்களை அடித்தே கொன்றுவிடுவார்கள். மும்பைக்கு மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேயின் செயல் அவர்களை மேலும் பின் தங்கச் செய்துவிடும். மும்பை மாகிம் தர்கா பகுதிக்கு சென்று இந்தி, உருது பேசுபவர்களை கொலை செய்யுங்கள் பார்க்கலாம். அப்படி செய்தால் அவர்களை பால் தாக்கரேயின் வாரிசுகள் சொல்வேன்'' என்று தெரிவித்தார்.

நிஷிகாந்த் துபே ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க எம்.பியாக இருக்கிறார். துபே இது போன்று பேசி இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்கள் முன்னேறுகிறது என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ``இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் எங்களுக்கு பின்னால் இருக்கின்றன. இந்தி பேசுபவர்களை விட நாங்கள் முன்னேறி இருக்கிறோம். அப்படியிருக்கும் போது நாங்கள் ஏன் இந்தி படிக்கவேண்டும். இந்தி பேசும் மாநிலங்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கின்றன" என்றும் ராஜ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள்... மேலும் பார்க்க

``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு" என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னி... மேலும் பார்க்க

'நான் யாருன்னு தெரியல?' - திடீரென விசாரித்த அமைச்சர்... தெரியாமல் விழித்த அரசு பேருந்து ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீச... மேலும் பார்க்க

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

'திருச்செந்தூர் குடமுழுக்கு!'திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப... மேலும் பார்க்க

இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயிலின் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.செல்வப்பெருந்தகைமூலவர... மேலும் பார்க்க