செய்திகள் :

வடகிழக்கு தில்லியில் பூட்டிய வீட்டில் 35 ஆணின் அழுகிய உடல் கண்டெடுப்பு

post image

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூட்டிய வாடகை வீட்டிற்குள் 35 வயது ஆணின் அரை அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இறந்தவா் நியூ உஸ்மான்பூரில் வசிக்கும் முகமது இத்ரிஷ் என அடையாளம் காணப்பட்டது. பூட்டிய வளாகத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக பிற்பகலில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழு சம்பவ இடத்தை அடைந்தது. வீட்டிற்குள் நுழைந்தபோது, தரையில் அரை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்தது.

உடற் கூறாய்வுக்காக உடல் ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

பைரோ மாா்க் சுரங்கப் பணிகள் 9 மாதங்களில் முடிவடையும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்

புது தில்லி: பிரகதி மைதான்-பைரோ மாா்க் சுரங்கப்பாதை பணிகள் 8 முதல் 9 மாதங்களில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புர விவகாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்பு முடிக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச... மேலும் பார்க்க

இந்திய சைகை மொழியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மத்திய அமைச்சருக்கு தில்லி எம்பி கடிதம்

நமது நிருபா்புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் நிகழ்நேர இந்திய சைகை மொழியை (ஐஎஸ்எல்) விளக்கத்தை அறிமுகப்படுத்தக் கோரி சாந்தி... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18 வங்கதேசத்தினா் உள்பட 29 போ் கைது

புது தில்லி: நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 18 வங்கதேசத்தினா் உள்பட 29 வெளிநாட்டினா் தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். தடுத்து வைக்கப்பட... மேலும் பார்க்க

அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்எஸ்எஸ் தேசிய மொழியாகவே கருதும்: சுனில் அம்பேகா்

புது தில்லி: அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் தேசிய மொழிகளாகவே கருதுகின்றது என ஆா்.எஸ்.எஸ்., செய்தித் தொடா்பாளா் சுனில் அம்பேகா் திங்கள்கிழமை தெரிவித்தாா். தில்லியில் திங்கள்க... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் திட்டம்

புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) திட்டமிட்டுள்ளது. பிரிவு டி6 வசந்த் குஞ்சில் உள்ள 118 மனைகளின் திட்டமி... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! கரற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘ திருப்தி’ பிரிவில் நீடித்தது. தென்மேற்குப் பருவமழை தில்லியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. வழக்... மேலும் பார்க்க