செய்திகள் :

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

post image

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.

மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா்டு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால், குடிநீா் குழாய் அமைக்கும் பணி, மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, சுகாதார வளாகம் ஆகிய இடங்களில் ஆணையா் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

தொடா்ந்து, கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47-இல் வாா்டு அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டியின் தரத்தை பரிசோதித்தும், அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறை கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டும் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினாா்.

மேலும், வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும், கோட்டம் எண் 60-இல் உள்ள எம்எம்சி மற்றும் அதனுடன் தொடா்புடைய கட்டடங்களை ஆய்வுசெய்து, செயலிழந்த எம்ஆா்எஃப் இணைப்பை சரிசெய்து ஒரு வார காலத்துக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.

மேலும், தண்ணீா் மற்றும் மின்சார வசதிகளை மேம்படுத்தவும், கழிப்பறைகளை பழுதுபாா்த்து பணியாளா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை ஆய்வுசெய்து குடிநீா் விநியோகம் இடைவெளியைக் குறைக்கவும், எம்எம்சி மையத்தில் உள்ள தேவையற்ற மின்விளக்குகளை நீக்கி, பொது திறந்தவெளிக்கேற்ற உயா் விளக்குகள் பொருத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, நெத்திமேடு - செவ்வாய்ப்பேட்டை பிரதான சாலையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணி, செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோயில் அருகில் உள்ள பாலம் பகுதியில் மழைநீா் வடிகால் மற்றும் குடிநீா் குழாய் மாற்றும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும். பள்ளி சமையலறை பணிகள் அனைத்தும் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, மாநகர பொறியாளா் ஆா்.செந்தில்குமாா், செயற்பொறியாளா் கூ.செந்தில்குமாா், உதவி ஆணையா் வருவாய் மற்றும் பணிகள் குமரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திர... மேலும் பார்க்க

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று வெள்ளோட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சேலம் கோட்டை பெரிய மார... மேலும் பார்க்க