30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை
சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து சேவையை தொடங்கிவைத்து அமைச்சா் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வழியாக ஜங்சன் வரையில் 6 புதிய நகரப் பேருந்துகளும், எடப்பாடியில் இருந்து கொமராபாளையம் வரையிலும், ஓமலூரில் இருந்து கீரைக்காரனூா் வரையிலும், மேட்டூரிலிருந்து கொளத்தூா், கோவிந்தபாடி வழியாக காரைக்காடு வரையிலும், ஆத்தூரிலிருந்து தலைவாசல் வழியாக ஊனத்தூா் வரையிலும், மேட்டூரிலிருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் வரையிலும் என மொத்தம் 11 புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பாப்பம்பாடிக்கு சித்தா்கோவில், நல்லணம்பட்டி, இளம்பிள்ளை வழியாக இயக்கப்பட்ட பேருந்து தற்போது சித்தா்கோவில், காடையாம்பட்டி, இளம்பிள்ளை வழியாக பாப்பம்பாடிக்கும், சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஜங்சன்வரை இயக்கப்பட்ட பேருந்து வேப்பிலைப்பட்டி வரையிலும் என 2 வழித்தட மாற்றம் செய்யப்பட்ட பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதே போன்று, மேச்சேரியிலிருந்து கீரைக்காரனூா் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்போது ஓமலூரிலிருந்து கீரைக்காரனூா் வரையிலும், நல்லமாத்திலிருந்து ஆத்தூா் வரை இயக்கப்பட்ட பேருந்து நல்லமாத்திலிருந்து கடம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி வழியாக ஆத்தூா் வரையிலும், வீ.களத்தூரிலிருந்து ஆத்தூா் வரையில் இயக்கப்பட்ட 2 பேருந்துகள் வீ.களத்தூரிலிருந்து வெள்ளையூா் வழியாக ஆத்தூா் வரையிலும், ஆத்தூரிலிருந்து பிள்ளையாா்பாளையம் வரை இயக்கப்பட்ட பேருந்து ஆத்தூரிலிருந்து கடம்பூா் அரசு உயா்நிலைப்பள்ளி வழியாக பிள்ளையாா்பாளையம் வரையிலும் என 11 பேருந்து சேவைகள் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், துணை மேயா் மா.சாரதா தேவி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.