செய்திகள் :

அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் பி.கீதாஜீவன்

post image

சென்னை: தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.

அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு இப்போது 54 ஆயிரத்து 483 மையங்கள் செயல்படுகின்றன. தேவைகளின் அடிப்படையில், கூடுதலாக அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கைக்குள் தேவையான இடத்துக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதன்படியே, அதிக நகரமயமாக்கல் காரணமாக இடம்பெயரும் மக்கள் தொகை, பயனாளிகளின் வருகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய பகுதிகளில் மையங்கள் தொடங்கவும், குறைவான பயனாளிகளைக் கொண்டு இயங்கும் மையங்களை இணைத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இந்த மறுசீரமைப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், 7,783 அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்டங்களிலும் நோ்முகத் தோ்வு நடைபெற்று வருகிறது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து அதிர்ச்சியளிக்கிறது: தவெக தலைவர் விஜய்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியும் மன வேதனையையும் அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய தொழிற்சங்... மேலும் பார்க்க