செய்திகள் :

Birds: அழிவின் விளிம்பில் 500 பறவை இனங்கள்; ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவுகள்; காரணம் என்ன?

post image

காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அடுத்த நூற்றாண்டுக்குள் 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழக (University of Reading) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சூழலியல் மற்றும் பரிணாம நோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கி.பி 1500 முதல் பதிவான பறவை அழிவுகளை விட வர இருக்கும் அழிவு மூன்று மடங்கு அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது.

பறவைகள்

இந்த ஆய்வறிக்கையின்படி, வெறும் கழுத்துள்ள குடைப்பறவை (bare-necked umbrellabird) மற்றும் தலைக்கவச ஹார்ன்பில் (helmeted hornbill) போன்ற குறிப்பிடத்தக்க இனங்கள் ஆபத்தில் உள்ளன.

இவற்றின் இழப்பு இந்தப் பறவைகளைச் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கணிசமாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், பறவைகளின் வாழ்விட அழிவு ஆகிய மனிதனால் தூண்டப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்துவதால் கூட, இந்தப் பறவை அழிவை முழுமையாகத் தடுக்காது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

IUCN சிவப்புப் பட்டியல் தரவுகளைக் கொண்டு சுமார் 10,000 பறவை இனங்களை ஆய்வு செய்து நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், பெரிய பறவைகள் வேட்டையாடுதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியவை என்றும், அகலமான இறக்கைகள் கொண்ட பறவைகள் வாழ்விட இழப்பால் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேசமயம், வாழ்விட அழிவை நிறுத்துவது ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்களைக் காப்பாற்றும் என்று இந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

சுற்றுச்சூழல் அமைப்பு செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட சில பறவை இனங்கள் இருக்கின்றன. வேட்டையாடுதலைக் குறைப்பது, விபத்து இறப்புகளைத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகளானது இப்பறவை இனங்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

பறவைகள்

இதனால், வரவிருக்கும் இந்த அழிவின் நெருக்கடியைத் தணிப்பதற்கும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பு மற்றும் முன்முயற்சியுடன் கூடிய உத்திகள் அவசியம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

இது குறித்து இந்த ஆராய்ச்சி முதன்மை ஆசிரியர் கெர்ரி ஸ்டீவர்ட், "பல பறவைகள் இனங்கள் ஏற்கனவே அழியும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் பறவை அழிவு நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம்.

அவற்றின் வாழ்விடங்களில் மனித அச்சுறுத்தல்களைக் குறைக்க உடனடி நடவடிக்கை தேவை.

அதேசமயம், மனித தாக்கங்களைக் குறைப்பது மட்டுமே அவற்றைக் காப்பாற்றாது.

இந்த இனங்கள் உயிர்வாழ இனப்பெருக்கத் திட்டங்கள் மற்றும் வாழ்விட மறுசீரமைப்பு போன்ற சிறப்பு மீட்புத் திட்டங்கள் தேவை" என்று கூறினார்.

பறவை
பறவை

மேலும், இந்த ஆராய்ச்சியின் மூத்த பேராசிரியை மானுவேலா கோன்சலஸ் சுவாரெஸ், "அடுத்த நூற்றாண்டில் இவை உயிர்வாழ வேண்டுமென்றால், இந்த அச்சுறுத்தல்களைத் தடுப்பது மட்டும் போதாது.

சுமார் 250 முதல் 350 இனங்களுக்கு இனப்பெருக்கத் திட்டங்கள் மற்றும் வாழ்விட மறுசீரமைப்பு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும்.

மிகவும் அரிய பறவைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பது, பறவைகளின் வடிவங்கள் மற்றும் அளவுகளின் குறிப்பிடத்தக்கப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும்.

இது சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிக முக்கியம்" கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மலப்புரம்: 53 நாள் தேடல், கூண்டுக்குள் சிக்கிய ஆக்ரோஷ புலி; சுட்டுக்கொல்ல போராடும் மக்கள் ஏன்?

கேரள மாநிலத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளால் வனவிலங்குகளின் வாழிட... மேலும் பார்க்க

கடல் போல் காட்சியளிக்கும் பவானி கூடுதுறை; காவிரி - பவானி சங்கமத்தின் அழகிய காட்சி! | Photo Album

காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை ... மேலும் பார்க்க

Hogenakkal: ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி! - Drone visuals

ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிகள்ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓக... மேலும் பார்க்க

மதகுகள் வழியாக சீறி பாயும் நீர்; பிரம்மிப்பூட்டும் மேட்டூர் அணை - சிறப்பு புகைப்பட ஆல்பம்!

மேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணை மேலும் பார்க்க

பழிவாங்குமா கதண்டுகள்; ஏன் கடிக்கின்றன; கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? | InDepth

'கதண்டு கடித்து பலி' என்கிற செய்தி அடிக்கடி நம் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னால்கூட திருநெல்வேலியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கதண்டு கடித்து உயிரிழந்துவிட்டான். கதண்டு பற்றிய... மேலும் பார்க்க

Shoe collection: தேவைக்கு அதிகமாக ஷூ வாங்கிக் குவிக்கும் மக்கள்; இதன் பின்விளைவு என்ன தெரியுமா?

நான் பயன்படுத்தும் ஷூக்கள் பழசானதும் அதனை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிகிறோம். இவ்வாறு எறியும் ஷூக்களால் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது. இந்தியாவைப்... மேலும் பார்க்க