செய்திகள் :

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை: ஆக. 1 முதல் அமல்!

post image

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாகும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்பு நடவடிக்கையை 90 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த டிரம்ப் அறிவித்த கால அவகாசம் ஜூலை 9 முடிவடைகிறது.

இந்தியா உள்ளிட்டட பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா கடந்த ஏப்ரலில் கூடுதல் வரி விதித்தது. இந்தியா மீது விதிக்கப்பட்ட 26 சதவீத வரி 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.

இந்தநிலையில், இந்த நடவடிக்கை ஆக. 1முதல் முறையாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க கருவூல துறைச் செயலர் ஸ்காட் பெசெண்ட் தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒப்பந்தம் இறுதியாவது அமெரிக்காவின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஜப்பானுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர, மேலும் சில நாள்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

US tariff plan will take effect August 1

ரஷியாவில் பதவி பறிக்கப்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டு அமைச்சர் தற்கொலை? என்ன நடந்தது?

ரஷியாவில் அதிபர் விளாதிமீர் புதினால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தனக்கு பரிசாகக் கிடைத்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரஷிய அரசாங்கத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போ... மேலும் பார்க்க

இந்தியா மீது கூடுதலாக 10% வரி? அமெரிக்கா எதிர்ப்பு கொள்கைகளுக்கு டிரம்ப் பதிலடி!

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையில் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஆம்... அப்படித்தான் சொல்லியாக வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவொடோபி லகி லகி எரிமலை சுமார் 18 கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்ததால் அப்பகுதி முழுவதும் படலம் மற்றும் புகைப் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தோனேசியாவின் புவியியல்... மேலும் பார்க்க

புதிய கட்சி தொடங்கினாா் எலான் மஸ்க்: டிரம்ப்புடனான மோதல் எதிரொலி!

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலைத் தொடா்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினாா். அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்தி... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 51-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா். வெள்ளத்தால் கடுமையாகப் பா... மேலும் பார்க்க

தலிபான் அரசை அங்கீகரிக்க அவசரமில்லை: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க எவ்வித அவசரமும் காட்டவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ரஷியா கடந்த 4-ஆம் தேதி அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் ... மேலும் பார்க்க