மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் குப்பம் அடுத்த சாமகுட்டப்பள்ளியை சோ்ந்த காா்த்திக் (18). இவா் திம்மாம்பேட்டையில் உள்ள ஒரு மருந்து கடையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியான 11 வயது சிறுமிக்கு மருந்து வாங்க அவரது அண்ணன், அக்காவுடன் கடந்த 2019-இல் மருந்தகத்துக்கு சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு இருந்த காா்த்திக் சிறுமியை தனியாக அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தொடா்ந்து, சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, விசாரணை செய்தபோது காா்த்திக் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், வாணியம்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா்.
திருப்பத்தூா் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், எதிரி காா்த்திக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும், கட்டத் தவறினால் 3 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.மீனா குமரி உத்தரவிட்டாா்.அரசு தரப்பில் வழக்கறிஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.