செய்திகள் :

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்!

post image

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

சேலம் மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் இதுவரை பெரிய அளவிலான தேர் எதுவும் இல்லாததால் சிறிய சப்பரம் மூலம் திருவீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மரத்தால் ஆன புதிய தேர் வடிவமைக்கப்படும் எனக் கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 40 அடி உயரம் 16 அடி அகலத்தில் தேர் வடிவமைக்கப்பட்டது. 100 டன் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தேரில் 6 அடி சுற்றளவு கொண்ட 4 அடி இரும்பு சக்கரங்களும், 25 அடி உயரத்திற்கு அலங்கார கொடுங்கை வேலைப்பாடுகளுடன், 15 உயரத்திற்குச் சிம்மாசனத்தில் இருக்கும் வகையில் 250 சாமி சிலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி கோசத்துடன் வடம் பிடித்துத் தேர் இழுத்தனர். திருத்தேரின் முன்பகுதியில் பம்பை மேளம் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க சிவன் பார்வதி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடிய படியும் பெண்கள் கோலாட்டம் ஆடியவாறு சென்றனர்.

இந்த தேரானது கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு துவங்கி முதல் அக்ரஹாரம், தேர் வீதி, இரண்டாம் அக்ரஹாரம், பட்டை கோவில், சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, பஜார் வீதி வழியாகச் சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இந்த தேர் வெள்ளோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் தேர் வெள்ளோட்டத்தை ஒட்டி அக்கிரகாரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

The Vellottam program was held today with great enthusiasm at the Periya Mariamman Temple in Salem Fort.

தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை இன்று(ஜூலை 7) வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 3,268 கி.மீ. சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவ... மேலும் பார்க்க

கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!

கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர... மேலும் பார்க்க

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், ம... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: தவெக போராட்டத்துக்கு அனுமதி!

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவக... மேலும் பார்க்க

தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு ... மேலும் பார்க்க