செய்திகள் :

ஐஆர்சிடிசி வழங்கும் ராமாயண சுற்றுலா! பார்க்க வேண்டிய 30 இடங்கள்!

post image

புது தில்லி: அயோத்தி ராமர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு 5வது சிறப்பு ராமாயண ரயில் சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

ஸ்ரீராமாயண யாத்திரை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுலா, ஜூலை 25ஆம் தேதி தொடங்குகிறது. அயோத்தியில் தொடங்கி, ஸ்ரீராமருடன் தொடர்புடைய நந்திகிராம், ஜனகபுரி, வாராணசி, பிரயாக்ராஜ், ஹம்பி என இறுதியாக ராமேஸ்வரத்தில் சுற்றுலா நிறைவு பெறுகிறது. மீண்டும் சுற்றுலா பயணிகள் தில்லியில் கொண்டு வந்து இறக்கிவிடப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்துடன் தொடர்புடைய சுமார் 30 தலங்களை 17 நாள்கள் செல்லும் இந்த சுற்றுலா திட்டத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வசதி கிடைக்கும். இதற்கு ஒருவருக்கு கட்டணமாக 3 டயர் ஏசி ரயில் பெட்டியாக இருப்பின் ரூ.1.17 லட்சம் வசூலிக்கப்படுகிறது. 2 டயர் ஏசி பெட்டியாக இருந்தால் ரூ.1.40 லட்சமாகவும், ஒரு டயர் ஏசி பெட்டிக்கு ரூ.1.66 லட்சமாகவும், 1 ஏசி பெட்டியில் தனியாக பயணிக்க ரூ.1.79 லட்சமாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 17 நாள்கள் இந்த சுற்றுப்பயணம் அடங்கும்.

இந்த கட்டணத்தில், போக்குவரத்து, தங்குமிடங்கள், சைவ உணவு மட்டும், பயணக் காப்பீடு என அனைத்தும் அடங்கும்.

ஜூலை 25ஆம் தேதி தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது. இதற்காக பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதால் மிகச் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்று கூறப்படுகறிது. இந்த சுற்றுலாவில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியும் இடம்பெற்றுள்ளது.

ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

ஹிமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஹிமாசலில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு க... மேலும் பார்க்க

இது டிரைலர்தான்! எங்களைச் சேர்த்தது மகாராஷ்டிர முதல்வர்! - ராஜ் தாக்கரே பேச்சு

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எங்களை மீண்டும் இணைத்துள்ளதாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர்ராஜ்தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநில பள்ளிகளில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக சிவசேனை(யுபிடி) ... மேலும் பார்க்க

உ.பி.யில் விபத்தில் சிக்கிய மணமகன் கார்: 8 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் உள்பட அவருடன் வந்த பத்து பேர் ஹர் கோவிந்த்பூர... மேலும் பார்க்க

ஹிந்திக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே!

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியில் சிவசேனை(யுபிடி) தலைவர்உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளில் 3 ஆவத... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். ராம்கர் ம... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை எரித்து, புதைத்துள்ளேன்: தர்மஸ்தலா ஊழியர்

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கடந்த 1998 - 2014ஆம் ஆண்டுக்குள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏராளமான பெண்களை புதைத்திருக்கிறேன், எரித்திருக்கிறேன் என்று தர்மஸ்தலா கோயில் துப்புரவுப் பணியாளர் த... மேலும் பார்க்க