செய்திகள் :

உ.பி.யில் விபத்தில் சிக்கிய மணமகன் கார்: 8 பேர் பலி!

post image

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணமகன் உள்பட அவருடன் வந்த பத்து பேர் ஹர் கோவிந்த்பூர் கிராமத்திலிருந்து புடானின் உள்ள சிர்டௌலுக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

சம்பல் மாவட்டத்தின் ஜுனாவாய் பகுதியில் உள்ள ஜனதா இன்டர் கல்லூரி அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி வளாக சுவரின் மீது மோதியது. தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கின.

விபத்தில் சிக்கியவர்களை ஜுனாவாய் சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

விபத்தில் மணமகன் சூரஜ் (24), ஆஷா (26) ஐஸ்வர்யா (3), சச்சின் (22), கணேஷ் (1), கோமல் (18), மது (20) மற்றும் ஓட்டுநர் ரவி (28) ஆகியோர் உயிரிழந்ததாகக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த தேவா (24) மற்றும் ஹிமான்ஷி (2) ஆகிய இருவரும் அலிகாரில் சிகிச்சை பெற்று வருகின்றனர், தேவாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஹிமான்ஷி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். கார் மிக அதிக வேகத்தில் பயணித்து கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக அமைந்தது.

இதற்கிடையில், உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சம்பல் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் பிரார்த்திப்பதாகவும் அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Eight people died while two others were injured after their SUV rammed into a wall in Sambhal district of Uttar Pradesh, police said on Saturday.

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.ஊராட்சி தலைவராக ஒருவர... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 ... மேலும் பார்க்க

சம்பளத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!

வருமான சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கொண்டாடப்படும் இந்தியா, தற்போது மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. வருமானத்தில் சமத்துவம்... மேலும் பார்க்க

அனைத்து பக்தர்களின் பாதுகாப்பும் எங்கள் முன்னுரிமை: துணைநிலை ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் யாத்திரைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தர்களின் பாதுகாப்பும் எங்களது முன்னுரிமை என்று மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தொடங்கி ஆகஸ்... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவால் அவர் ஜூன் 23ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியா... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற ரசாயன ஆலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிகாச்சி மருந்து ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற வெடி ... மேலும் பார்க்க