அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!
ஹிந்திக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே!
மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியில் சிவசேனை(யுபிடி) தலைவர்உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி திணிக்கப்பட்டதற்கு சிவசேனை(யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்கட்சியினரின் அழுத்தத்தினால் மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
இதையொட்டி மும்பையில் இன்று தாக்கரே சகோதரர்கள் இருவரும் ஒரே மேடையில் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். இருவரும் கைகோர்த்து கட்டியணைத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
"ஹிந்தி வெறும் 200 ஆண்டு கால வரலாறு கொண்ட மொழி. ஹிந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 3-வது மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" என ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.
ஹிந்திக்கு எதிரான போராட்டத்தில் தாக்கரே சகோதரர்கள் இருவரும் இணைந்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன்தான் ராஜ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
Brothers Uddhav Thackeray and Raj Thackeray share a hug as Shiv Sena (UBT) and Maharashtra Navnirman Sena (MNS) are holding a joint rally against hindi imposition in maharashtra.