செய்திகள் :

உ.பி.யில் பூட்டிய வீட்டினுள் ஏசி மெக்கானிக் 4 பேர் சடலங்களாக மீட்பு ! காரணம் என்ன?

post image

உத்தரப் பிரதேசத்தில் பூட்டிய வீட்டினுள் இருந்து ஏசி மெக்கானிக் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், தக்ஷின்புரியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் வசிக்கும் தனது உறவினர் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதாகவும் சீஷன் என்பவர் போலீஸாரிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், வீட்டின் முதல் தளத்தில் நான்கு பேர் மயக்கமடைந்திருப்பதைக் கண்டனர்.

உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஏற்கெனவே மூவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹசீப் பின்னர் பலியானார் என்று போலீஸார் கூறினார்.

பலியான அனைவரும் உ.பி.யைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர்.

அறையில் வைக்கப்பட்டிருந்த ஏசியின் சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு 4 பேரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகே முழுமையான காரணம் தெரியவரும். அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக அந்த வளாகத்தில் வசித்து வந்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Four air conditioning mechanics died of suspected gas leak at their rented accommodation in south Delhi’s Dakshinpuri area, police said on Saturday.

பிரிக்ஸ் மாநாடு: பிரதமரை வரவேற்ற குட்டி இதயங்கள்...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பிரேசில் சென்றுள்ளார்ரியோ டி ஜெனீரோ நகரில் பிரதமரை வரவேற்க திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் பிரேசிலுக்குச் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு...... மேலும் பார்க்க

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சீர்திருத்தம் குறித்து இன்று (ஜூலை 6) உரையாற்றினார். அரசு முறைப் பயணமா... மேலும் பார்க்க

ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது. வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் த... மேலும் பார்க்க

மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோத்தம்பா காவ... மேலும் பார்க்க

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க