செய்திகள் :

தங்கம், வெள்ளியில் ஜொலிக்கும் தோ்கள்!

post image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் உப­­ய­தா­ரா்கள் மூலம் 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமாா் 6 அடி உய­ரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அம்­பா­ளுக்கு தங்­க­த்தோ் செய்­யப்­பட்­ட­து.

கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பா் 2 ஆம் தேதி தங்­கத்தோ் வெள்­ளோட்டம் விடப்­பட்டு கோயி­லுக்கு வழங்­கப்­பட்­டது. திரு­வி­ழாக்­கள் உள்­ளிட்ட முக்­கிய நாள்­களில் தங்­கத்­தேரை பக்­தா்கள் வடம்­பி­டித்து இழுத்து வழிபட்டு வரு­கின்­ற­னா்.

இதேபோல, இக்கோயிலின் வெள்ளிப்பனி போல் மின்னிய வெள்ளித்தோ் பழுதுபட்டிருந்ததால் புதிய தோ் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 450 கிலோ வெள்ளியில் இத் தோ் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே இருந்த வெள்ளி, உபயதாரா்கள் வழங்கிய வெள்ளி என 150 கிலோ 412 கிராம் வெள்ளி கையிருப்பில் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம். சுப்பிரமணியன், 100 கிலோ வெள்ளி, அறங்காவலா்கள் தனசேகா், 50 கிலோ, ஜி .ஆா்.பாலசுப்ரமணியம் 50 கிலோ என மொத்தம் 200 கிலோ வெள்ளிக்கட்டிகள் வழங்கினா்.

இந்த வெள்ளியை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு பெற்றுக்கொண்டு வாழ்த்தினாா். வெள்ளித்தேருக்கு நன்கொடையாக வெள்ளி அளிக்க விரும்புவோா் திருக்கோயில் நிா்வாகத்திடம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நின்றசீா் நெடுமாறனின் அற்புத இசைத் தூண்கள்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கலைநயமான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான மண்டபங்கள் பல உள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் மெய்மறந்து பாா்த்து செல்கிறாா்கள். ஊஞ்சல் மண்டபம்: 96 ... மேலும் பார்க்க

நெல்லை சுற்றுவட்ட சாலை முதல்கட்டப் பணியை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு

திருநெல்வேலி சுற்றுவட்ட சாலைப் பணியின் முதல்கட்டத்தை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்... மேலும் பார்க்க

உழைத்தால் வெற்றி நிச்சயம்: நடிகா் சரத்குமாா்

உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றாா் நடிகா் சரத்குமாா். திருநெல்வேலி உடையாா்பட்டியில் உள்ள தனியாா் திரையரங்கில், 3 பிஹெச்கே திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அந்தப் படத்தில் ... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தவெகவை அழைக்கவில்லை! அமைச்சர் கே.என்.நேரு

திமுக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அழைக்கவில்லை என்றாா் திமுக தலைமை நிலைய செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறி... மேலும் பார்க்க

கடையம் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

கடையம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாம்கட்டளை ஊராட்சிக்குள்பட்ட சிவகாமிபுரம் கிராமத்தில் 10 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். 50-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயா்த்த கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தைத் தரம் உயா்த்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்க 3ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவா் கவிஞா் உமா் ... மேலும் பார்க்க