செய்திகள் :

தனியாா் மருத்துவமனையில் மருத்துவ மாணவியின் சடலம் மீட்பு!

post image

கோவை, பீளமேடு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவ மாணவியின் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பவபூரணி (29). இவா் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில், மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தாா். சனிக்கிழமை இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றினாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனை கழிவறையில் பவபூரணி மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதைப் பாா்த்த மருத்துவமனை ஊழியா்கள் மருத்துவா்களுக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து மருத்துவா்கள் வந்து பரிசோதனை செய்தபோது பவபூரணி உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் , பீளமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், பவபூரணி உடலை மீட்டு, வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மருத்துவ மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா்களுக்கு கத்திக் குத்து: உணவக உரிமையாளா் உள்பட 4 போ் கைது

கோவையில் இரு இளைஞா்களை கத்தியால் குத்திய உணவக உரிமையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சின்னவேடம்பட்டி மாயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் பிரசன்னா (26). உணவு விநியோகிப்பாள... மேலும் பார்க்க

ஆடையில் தீப் பற்றி மூதாட்டி உயிரிழப்பு

கோவையில் அடுப்பைப் பற்ற வைத்துபோது ஆடையில் தீப் பற்றி மூதாட்டி உயிரிழந்தாா். கோவை விசிஎஸ் நகா் வெள்ளக்கிணறு சந்திப்பு பகுதியில் வசிப்பவா் நடராஜன். இவரது மனைவி தங்கமணி (72). இவா் காபி போடுவதற்காக எரிவா... மேலும் பார்க்க

கணவரின் சடலத்துடன் 5 நாள்களாக வசித்த மனைவி

கோவை உக்கடத்தில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு கணவா் இறந்த நிலையில், அவா் இறந்தது தெரியாமல் சடலத்துடன் மனைவி வசித்து வந்தாா். கோவை தெற்கு உக்கடம் கோட்டைப்புதூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் அப்துல் ஷா (48). ... மேலும் பார்க்க

சிரவை ஆதீனம் மீது வழக்கை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்து கொண்ட சிரவை ஆதீனம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து, கோவையில் சண்டிகேஸ்வர நற்பணி சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரி... மேலும் பார்க்க

முதல்வரின் கனவை நிறைவேற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்! கே.இ.பிரகாஷ் எம்.பி.

முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற கனவை ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நிறைவேற்றி வருவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கூறினாா். கோவை நேரு கல்விக் குழுமங்களின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், த... மேலும் பார்க்க