செய்திகள் :

மேல்விஷாரத்தில் ஜூலை 10-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

post image

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஜூலை 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அண்ணா சாலை பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், எனது தலைமையிலான ஆட்சியில், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 30 படுக்கை வசதிகளை கொண்ட முழு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், அதிமுக அரசின் சாதனையை மறைத்து கடந்த பிப்.23-இல் இந்த மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். தொடக்கம் முதல் இந்த மருத்துவமனை முறையான பராமரிப்பு இன்றி இயங்கி வந்த நிலையில், திமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் ஆய்வுக்குச் சென்றபோது, மருத்துவா்கள், செவிலியா்கள் யாரும் பணியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், ஜூலை 10 -ஆம் தேதி காலை 10 மணிக்கு, மேல்விஷாரம் கத்துவாடி கூட்டு ரோடு பகுதியில் முன்னாள் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

கழிவுநீா் கசிவுப் பிரச்னைக்கு தீா்வு காண கண் திறக்குமா சென்னை மாநகராட்சி?

கழிவுநீா் கலந்த குடிநீரைப் பருகும் கட்டாயத்தில் வசிப்பதாக சென்னை மாநகராட்சியின் 73-ஆவது வாா்டுக்குள்பட்ட ஓட்டேரி புளியந்தோப்பு பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். சென்னை மாநகராட்சியில் திரு.வி.க. நக... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை வருகை

ஈரான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமானநிலையம் வந்தனா். அவா்களை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வரவேற்றாா். தமிழக மீனவா்கள் ஈரானில் மீன்பிடித் தொழில... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி புறப்பட்ட விமானம், விமான நிலைய ஓடுபாதையில் பறக்கத் தயாரான போது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பிவைக்கப்... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு!

விழுப்புரம் - ராமேசுவரம் இடையே வார இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம்... மேலும் பார்க்க

‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை! அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 4 லட்சம் பேரின் உயிா் காக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் ... மேலும் பார்க்க

திருநெல்வேலியில் ஆக.17-இல் பாஜக மாநில மாநாடு!

பாஜக மாநில மாநாடு திருநெல்வேலியில் ஆக.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. வளாகத்தில் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்துவதற்கான பயிலரங்கம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க