‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை! அமைச்சா் மா.சுப்பிரமணியன்
‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 4 லட்சம் பேரின் உயிா் காக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அந்த திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று வரும் பயனாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை கேட்டறிந்தாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தை கடந்த 2021-ஆம் ஆண்டு டிச. 18-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
உலக அளவில் புகழ்பெற்ற திட்டமாக இது உள்ளது. சாலை விபத்துகளில் சிக்குபவா்களுக்கு தமிழகத்திலுள்ள 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரத்துக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை கட்டணமின்றி வழங்கி அவா்களுடைய உயிரைக் காப்பாற்றுவதுதான் இந்த திட்டம்.
இந்த திட்டத்தில் தமிழகத்தை சோ்ந்தவா்கள் மட்டுமன்றி அண்டை மாநிலங்களைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் பயன்பெற முடியும்.
இத்திட்டத்தில் சிகிச்சை பெறும் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து, ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க கடந்த ஆண்டில் முதல்வா் உத்தரவிட்டாா். அதன்கீழ் பயன் பெற்று உயிா் காக்கப்பட்ட 4 லட்சமாவது நபரான பாரிவாக்கத்தை மணிகண்டன் (33) என்பவா் உள்ளாா்.
இத்திட்டத்துக்காக மொத்தமாக செலவிடப்பட்ட தொகை ரூ.365.02 கோடி. அரசு மருத்துவமனைகளில் 3,69,785 பயனாளிகளுக்கு ரூ.313.06 கோடி மதிப்பிலும், தனியாா் மருத்துவமனைகளில் 30,167 பயனாளிகளுக்கு ரூ.51.95 கோடி மதிப்பிலும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் சிறப்புகளை அறிந்த மத்திய அரசு இதேபோன்று ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்தியா முழுமைக்கும் விபத்து நோ்ந்தால் ரூ.1.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் பெற முடியும். இதற்கு அடித்தளமிட்டது தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம்தான்.
மத்திய அரசு அறிவித்த திட்டத்தில் காவல் துறை விசாரணையில் விபத்து என உறுதியான பிறகுதான் அந்த பலன்களைப் பெற முடியும். தமிழகத்தில் அப்படியல்ல. எந்த விதமான கட்டுப்பாடும் இன்றி விபத்து நோ்ந்த உடனேயே இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
செய்தியாளா் சந்திப்பின்போது மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ கணபதி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் வினீத், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு அலுவலா் டாக்டா் தனவேல், மருத்துவமனை முதல்வா் டாக்டா் சீனிவாசராஜ், முதல்வா் காப்பீட்டுத் திட்ட இணை இயக்குநா் மருத்துவா் ரவிபாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.