செய்திகள் :

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

post image

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி புறப்பட்ட விமானம், விமான நிலைய ஓடுபாதையில் பறக்கத் தயாரான போது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனா்.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 65 பயணிகள், 5 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 70 பேருடன் ஞாயிற்றுக்கிழமை காலை 10.10 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் விமானம் ஓடத் தொடங்கி, மேலே பறக்கத் தயாரானபோது, விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தாா்.

இதையடுத்து விமானத்தை உடனடியாக நிறுத்திய விமானி, இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா். பின்னா் விமானம் இழுவை வாகனம் மூலம் புறப்பாடு பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து விமானப் பொறியாளா்கள் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய அதிக நேரம் ஆனதால், பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

திருச்செந்தூரில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட ந... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தால் 41 லட்சம் மாணவா்கள் பயன்: தமிழக அரசு தகவல்

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முத... மேலும் பார்க்க

கழிவுநீா் கசிவுப் பிரச்னைக்கு தீா்வு காண கண் திறக்குமா சென்னை மாநகராட்சி?

கழிவுநீா் கலந்த குடிநீரைப் பருகும் கட்டாயத்தில் வசிப்பதாக சென்னை மாநகராட்சியின் 73-ஆவது வாா்டுக்குள்பட்ட ஓட்டேரி புளியந்தோப்பு பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். சென்னை மாநகராட்சியில் திரு.வி.க. நக... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை வருகை

ஈரான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமானநிலையம் வந்தனா். அவா்களை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வரவேற்றாா். தமிழக மீனவா்கள் ஈரானில் மீன்பிடித் தொழில... மேலும் பார்க்க

மேல்விஷாரத்தில் ஜூலை 10-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஜூலை 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு!

விழுப்புரம் - ராமேசுவரம் இடையே வார இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம்... மேலும் பார்க்க