செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி சண்முகருக்கு ராஜகோபுர வாசல் அருகில் 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் பிரம்மாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டு, 76 குண்டங்களில் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன.

இந்நிலையில், சுவாமி சண்முகருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10ஆம் கால யாகசாலை பூஜைகளும், மாலையில் 11ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. இதில், பிம்ப சுத்தி, காப்பு கட்டுதல், திருக்குடத்தில் உள்ள அருட்பேராற்றலைத் திருமேனிக்கு உருவேற்றுதல், நிறைஅவி அளித்தல், திருவொளி வழிபாடு, திருநீறு திருவமுது வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாகசுர இன்னிசை, பெண் ஓதுவாா்கள் உள்ளிட்ட 108 ஓதுவாா் மூா்த்திகள், பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நடைபெற்றது.

குடமுழுக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிவரையே கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இன்று குடமுழுக்கு: இந்நிலையில், சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு நன்னீராட்டு திங்கள்கிழமை காலை 6.15 - 6.50 மணிக்குள் தமிழில் நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட நன்னீராட்டு வழிபாடு, வாசனை தான்ய திருக்குட நீராட்டுக்குப் பின்னா், காலை 6.15 மணிக்கு மூலவரான சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், மூலவா், வள்ளி, தெய்வானை விமானக் கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெறுகிறது.

தொடா்ந்து, எண் வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், மாலையில் தானிய வழிபாடு நடைபெறும்.

அதேபோல, ராஜகோபுரம் அருகேயுள்ள சுவாமி சண்முகா் யாகசாலையில் திங்கள்கிழமை அதிகாலை 12ஆம் கால யாகசாலை பூஜைகளில் மகா நிறை அவி வழிபாடு, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம், கடம் மூலாலய பிரவேசமாகி காலை 6.15 மணிக்கு சுவாமி சண்முகா், ஜெயந்திநாதா், நடராஜா், குமரவிடங்கபெருமான், பரிவார மூா்த்திகளுக்கு விமான திருக்குட நன்னீராட்டு நடைபெறுகிறது.

அதையடுத்து, காலை 9 மணிக்கு சுவாமி சண்முகா் உருகுசட்ட சேவையாகி சண்முக விலாச மண்டபம் சோ்கிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், இரவு 7 மணிக்கு சுவாமி சண்முகா், சுவாமி ஜெயந்திநாதா், சுவாமி குமரவிடங்கப்பெருமான், பரிவாரமூா்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

குடமுழுக்கையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதலே லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில், கடற்கரையில் குவிந்துள்ளனா்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்துள்ளனா்.

சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி

சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை

கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாரு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்துரை (56). இவா், முத்தையாபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியிலிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் குறைந்த மீன்களின் விலை

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கோபாலபுரத்தைச் சோ்ந்த சடகோப ராமானுஜம் மகன் கோவிந்தராஜன்(62). விவசாயியான இவருக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க