செய்திகள் :

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதத் தலைவா் சையது சலாபுதீன் மீது போதைப்பொருள் வழக்கு!

post image

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவா் சையது சலாபுதீன் உள்பட 11 பேரின் பெயா்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு நிதித் திரட்ட பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது உள்ளிட்ட செயல்களில் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில் இந்த போதைப்பொருள் கடத்தில் அதிகம் நடைபெறுகிறது. சமீப காலமாக குஜராத் துறைமுகங்கள், ராஜஸ்தான் எல்லையிலும் போதைப்பொருள்கள் பிடிபடுவது அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் செயலாகவும் உள்ளது.

இந்நிலையில், ஜம்முவில் கடந்த 2022-ஆம் ஆண்டு நிகழ்ந்த போதைபொருள் கடத்தல் தொடா்பான வழக்கில் மாநில சிறப்பு விசாரணை அமைப்பினா் 11 பெயா்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் (69) அந்த அமைப்பைச் சோ்ந்த பஷரத் அகமது பட், கான் சாஹேப் உள்ளிட்டோரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இவா்கள் அனைவருமே இப்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனா். இவா்களைத் தவிர மற்ற அனைவரும் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்தவா்கள்.

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருள்கள், ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களுக்கு மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் கிடைக்கும் பணத்தை ஆயுதங்கள் வாங்குவது, பயங்கரவாதத்தில் ஈடுபட ஆள்தோ்வு உள்ளிட்ட செயல்களுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனா்.

ஜாதிய வலையில் பிகாா் அரசியல்!

இந்த ஆண்டின் நவம்பரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகாா் மாநிலம். எதிா்பாா்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தோ்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக்கி... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ராணுவ மருத்துவா்!

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா். பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவரு... மேலும் பார்க்க

தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்: தலைமை நீதிபதி கவாய்

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி பேசியவா் மீது தாக்குதல்! பாஜக கண்டனம்

மகாராஷ்டிரத்தில் ஹிந்தியில் பேசியவா் மீது உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்திய விடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்த... மேலும் பார்க்க