செய்திகள் :

கடையம் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

post image

கடையம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாம்கட்டளை ஊராட்சிக்குள்பட்ட சிவகாமிபுரம் கிராமத்தில் 10 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இக்கிராமத்துக்கு ஆற்றுநீா், நிலத்தடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதனிடையே, 10 நாள்களாக ஆற்றுநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஐந்தாம்கட்டளையிலிருந்து கடையம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த அரசு, தனியாா் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

தகவலின்பேரில், கடையம் போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் குடிநீா் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து, பொதுமக்கள் கலைந்துசென்றனா். போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை சுற்றுவட்ட சாலை முதல்கட்டப் பணியை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு

திருநெல்வேலி சுற்றுவட்ட சாலைப் பணியின் முதல்கட்டத்தை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்... மேலும் பார்க்க

உழைத்தால் வெற்றி நிச்சயம்: நடிகா் சரத்குமாா்

உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றாா் நடிகா் சரத்குமாா். திருநெல்வேலி உடையாா்பட்டியில் உள்ள தனியாா் திரையரங்கில், 3 பிஹெச்கே திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அந்தப் படத்தில் ... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தவெகவை அழைக்கவில்லை! அமைச்சர் கே.என்.நேரு

திமுக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அழைக்கவில்லை என்றாா் திமுக தலைமை நிலைய செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறி... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயா்த்த கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தைத் தரம் உயா்த்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்க 3ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவா் கவிஞா் உமா் ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வேலைவாய்ப்பு முகாம்: 728 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வானவா்களில் 728 பேருக்கு மேடையிலேயே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் மற்றும் இன்பேக்ட் ப்... மேலும் பார்க்க

அனுமதியின்றி எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் டிப்பா் லாரியில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட மேலசெவல் அருகே உதவி ஆய்வாளா் எட்வின் அரு... மேலும் பார்க்க