செய்திகள் :

ரௌடி கும்பல் தலைவர் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு! ஒருவரைக் கொல்ல 40 பேர் திட்டம்!

post image

மகாராஷ்டிரத்தில் ரௌடி கும்பல் தலைவர் மனைவியை கொலை செய்ததாக ஒருவரை 40 பேர் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தில் இப்பா என்ற ரௌடி கும்பலைச் சேர்ந்த அர்ஷத் டோபி என்பவருக்கும், கும்பல் தலைவரின் மனைவிக்கும் இடையே திருமணம்மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமையில் அந்தப் பெண்ணுடன் டோபி சேர்ந்து பைக்கில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஜேசிபி மோதியதில் இருவரில் பெண் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, பெண்ணை இரண்டு தனியார் மருத்துவமனைக்கு அர்ஷத் அழைத்துச் சென்றபோதிலும், பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனை மறுத்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமையில் பெண் உயிரிழந்தார்.

இதனிடையே, அர்ஷத்துக்கும் தனது மனைவிக்கும் இடையே திருமணம்மீறிய உறவு இருப்பதை அறிந்த ரௌடி கும்பல் தலைவர், அர்ஷத்தை கொலை செய்ய திட்டமிட்டு, 40 அடங்கிய இப்பா கும்பலுக்கு உத்தரவிட்டார்.

விபத்தினால் தனது மனைவி உயிரிழந்திருக்க மாட்டார், அர்ஷத் கொலை செய்ததால்தான் உயிரிழந்திருப்பார் என்று குற்றஞ்சாட்டி அர்ஷத்தை தேடி வந்தனர்.

தன்னை 40 பேர் அடங்கிய கும்பல் தேடுவதை அறிந்த அர்ஷத், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல் நிலையத்தில் வாக்குமூலத்துடன் தஞ்சம் அடைந்தார்.

பெண்ணை அர்ஷத் கொலை செய்திருக்கலாம் என்று கூறினாலும், காயமடைந்த பெண்ணுடன் மருத்துவமனையில் அர்ஷத் இருக்கும் சிசிடிவி காட்சிகளும் உள்ளன.

40 Gangsters Hunt Rogue Member After Leader's Wife Dies In Secret Affair

ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது. வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் த... மேலும் பார்க்க

மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோத்தம்பா காவ... மேலும் பார்க்க

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க