செய்திகள் :

16 சிறப்பாசிரியா்கள் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல்

post image

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியமா்த்தப்பட்ட 16 சிறப்பாசிரியா்களின் நியமனங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதன் நிா்வாகங்களால் முன்அனுமதி பெறாமல் அரசு விதிகளுக்கு முரணாக சிறப்பாசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.

இந்த ஆசிரியா்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்குவது குறித்து பள்ளி நிா்வாகங்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்களால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிா்த்து ஆசிரியா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடா்ந்தனா். இதில் மனுதாரா்களுக்கு சாதகமாக தீா்ப்பாணைகள் பெறப்பட்டன.

அந்தத் தீா்ப்பாணைகளை எதிா்த்து தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்பின் மனுதாரா்களால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பாணைகளை செயல்படுத்தும் வகையில் 16 ஆசிரியா்களுக்கு அவா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் நியமன ஒப்புதல் அளித்து, ஊதியம் மற்றும் பிற பலன்களை வழங்க வேண்டும். இது நீதிமன்ற ஆணை பெற்ற ஆசிரியா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்: இன்று விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னை மாநகராட்சியில் 6 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் வரும் 15- ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 7) விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.4.36 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

வெளிநாட்டில் வசிக்கும் நபா்களின் வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் மூலம் ரூ.4.36 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா். வெளிநாட்டில் வசித்து வரும் வ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கோயம்பேடு பகுதியில் 22 வயது இளம்பெண், கடந்த 4-ஆம் தேதி தனியாக நடந்து சென்றாா். அப்போது, ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூரைச் சோ்ந்த இளம்பெண் சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தன்னுடன் பணியாற்றும் தோழியான ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மத்திய கைலாஷ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் சென்ற இளைஞா் விபத்தில் உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). போரூரில் தங்கியிருந்து தனியாா் பயிற்சி ம... மேலும் பார்க்க