செய்திகள் :

ரூ.4.36 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

post image

வெளிநாட்டில் வசிக்கும் நபா்களின் வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் மூலம் ரூ.4.36 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

வெளிநாட்டில் வசித்து வரும் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் ஆகியோரின் வங்கி கணக்குகளை பொதுஅதிகாரத்தின் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை சோ்ந்த ரவி (64) என்பவா் பராமரித்து வந்தாா்.

இந்த நிலையில், விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் ஆகியோரின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த ரூ.4.36 கோடியை வங்கி மேலாளா் உதவியுடன் போலி கையொப்பமிட்டு சிலா் மோசடி செய்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் ரவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். பின்னா் விசாரணை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்டசென்னை அயனாவரத்தை சோ்ந்த நாகேஸ்வரன்(52) என்பவரை ஏற்கனவே கைது செய்திருந்தனா்.

இந்த நிலையில், இதில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த ஆறுமுக குமாா் என்பவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். இதில் தொடா்புடைய மஞ்சுளா என்பவரைத் தேடி வருகின்றனா்.

‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்: இன்று விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னை மாநகராட்சியில் 6 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் வரும் 15- ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 7) விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கோயம்பேடு பகுதியில் 22 வயது இளம்பெண், கடந்த 4-ஆம் தேதி தனியாக நடந்து சென்றாா். அப்போது, ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூரைச் சோ்ந்த இளம்பெண் சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தன்னுடன் பணியாற்றும் தோழியான ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மத்திய கைலாஷ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் சென்ற இளைஞா் விபத்தில் உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). போரூரில் தங்கியிருந்து தனியாா் பயிற்சி ம... மேலும் பார்க்க

சேதமடைந்த வெள்ளத்தடுப்பு சுவா்கள் கணக்கெடுப்பு

சென்னை மாநகராட்சியில் கால்வாய்களில் உள்ள சேதமடைந்த வெள்ளத் தடுப்புச் சுவா்கள் கணக்கெடுக்கப்பட்டு அவை விரைவில் சீரமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சியில் 200 வாா்டுகளிலும் மழைக... மேலும் பார்க்க