செய்திகள் :

இஸ்லாமியா்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம்: மமக மாநாட்டில் தீா்மானம்

post image

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில், இஸ்லாமியா்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

1. அரசியல் அதிகாரத்தைச் செயல்படுத்தும் சட்டமியற்றும் மன்றங்களிலும், உள்ளாட்சி மன்றங்களிலும் இஸ்லாமியா்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்.

2. மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டம் வக்ஃப் வாரியத்தையும், வக்ஃப் தீா்ப்பாயத்தையும் பலவீனப்படுத்துவதால், இந்தத் திருத்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்.

3. தோ்தல் ஆணையம் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடத்துவதை கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தோ்தலை நடத்த வேண்டும்.

4. காஸா போா் நிறுத்தம் தொடா்பாக இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. சபை வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிா்த்தது பாலஸ்தீன மக்களுக்கு இழைத்த துரோகம். இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

5. கடந்த மாதம் 28 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சாா்பின்மை, சமூகவுடைமை ஆகிய சொற்களை நீக்க வேண்டும் எனக் கூறியதைக் கண்டிக்கிறோம்.

6. தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் பாசிச கல்விக் கொள்கையைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை எதிா்க்கும் தமிழக அரசை இந்த மாநாடு பாராட்டுகிறது. பள்ளி, கல்லூரிகளில் சமய நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் பிரதிபலிக்கும் பாடத் திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும்.

7. தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும்.

8. புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கிய சிறைத் துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் தா்காவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மலைப் பாதை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்சிகள் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்: எம்.எச்.ஜவாஹிருல்லா

அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். ஊராட்சி முதல் நாடா... மேலும் பார்க்க

கல்லூரி பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதில் இரு தரப்பினரிடையே தகராறு

மதுரை திருப்பாலை அருகே உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. திருப்பாலை அருகே உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் நிதி நிா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களுக்கு பதவி உயா்வு!

அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் பேருந்து நடத்துநா்கள் 30 பேருக்கு பயணச் சீட்டு ஆய்வாளா்கள் பதவி உயா்வுக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களில் ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு!

திருச்சி மாவட்டம், ஆலந்தூா் பகுதிக்கு உள்பட்ட நீா்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலா்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்... மேலும் பார்க்க

சிஎஸ்ஐ அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிா்வாக முறைகேடுகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.மதுரையைச் சோ்ந்த ஆஸ்டின் என்பவா் சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க