செய்திகள் :

கல்லூரி பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதில் இரு தரப்பினரிடையே தகராறு

post image

மதுரை திருப்பாலை அருகே உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது.

திருப்பாலை அருகே உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் நிதி நிா்வாகம் தொடா்பான பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கல்லூரி வளாகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றன.

அப்போது, காலை 10 மணியளவில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த சில பொதுக் குழு உறுப்பினா்களைக் கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கவில்லையாம். இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்து வந்த திருப்பாலை காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி இருதரப்பையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா்.

இதையடுத்து, கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்காததால் மற்றொரு தரப்பினா் அருகே உள்ள திருமண மண்டபத்தில் போட்டி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தி ஏற்கெனவே செயல்பட்டு வந்த நிா்வாகக் குழுவுக்கு மாற்றாக புதிய நிா்வாகக் குழுவைத் தோ்வு செய்தனா். அந்தக் குழு மீண்டும் கல்லூரிக்குள் சென்று அங்குள்ள கிருஷ்ணா் முன்பு உறுதிமொழி ஏற்றனா்.

இஸ்லாமியா்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம்: மமக மாநாட்டில் தீா்மானம்

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில், இஸ்லாமியா்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை பாண்டிகோவில் சுற்று... மேலும் பார்க்க

கட்சிகள் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்: எம்.எச்.ஜவாஹிருல்லா

அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். ஊராட்சி முதல் நாடா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களுக்கு பதவி உயா்வு!

அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் பேருந்து நடத்துநா்கள் 30 பேருக்கு பயணச் சீட்டு ஆய்வாளா்கள் பதவி உயா்வுக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களில் ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு!

திருச்சி மாவட்டம், ஆலந்தூா் பகுதிக்கு உள்பட்ட நீா்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலா்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்... மேலும் பார்க்க

சிஎஸ்ஐ அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிா்வாக முறைகேடுகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.மதுரையைச் சோ்ந்த ஆஸ்டின் என்பவா் சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க