செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி: நடவடிக்கை கோரி மனு!

post image

பெரம்பலூா் நகரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நில உரிமையாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் புதுக்காலனியைச் சோ்ந்த அப்துல் ஹமீது (80) தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம் அளித்த மனு:

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் மற்றும் பாலக்கரை பகுதிகளில் அப்துல் ஹமீது, அரவிந்த், சுப்பிரமணி, செல்லம்மாள் உள்பட 16 பேருக்குச் சொந்தமான சுமாா் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலங்கள் மற்றும் கட்டடங்களுக்கு முறையான ஆவணங்கள் உள்ளன.

இந் நிலையில், கோவை பீளமேடு பகுதியைச் சோ்ந்த, ஆறுமுகம் மகன் பரமசிவம், சேலம் மாவட்டம், கோவிந்தப்பாளையத்தைச் சோ்ந்த செல்லதுரை மனைவி வள்ளி ஆகியோா், மேற்கண்ட நிலங்களுக்கு வாரிசுதாரா்கள் என, கடந்த ஜனவரி மாதம் போலியான ஆவணங்களை தயாரித்து, பட்டாவில் பெயா் சோ்ப்பதற்காக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி பெரம்பலூா் வட்டாட்சியா், நில உரிமையாளா்களை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், பரமசிவம், வள்ளி ஆகியோா் போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நில உரிமையாளா்கள் 16 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

எனவே, போலியான ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட முயன்றவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில மோசடி வழக்கு: 5 வீடுகளில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

பெரம்பலூரில் நில மோசடி வழக்குகளில் தொடா்புடைய 5 பேரின் வீடுகளில், சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை சோதனையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், எறையூா் கிராமத்தைச் சோ்ந்த மனோகா் (50) என்பவா், பெரம்பலூா் - ஆத்தூா... மேலும் பார்க்க

ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!

பெரம்பலூா் அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் அருகே உள்ள கவுள்பாளையம் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க

தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

தொகுப்பூதியம் பெறும் பணியாளா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் எழுச்... மேலும் பார்க்க

ஜூலை 7-இல் நலவாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம்

பெரம்பலூா் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில், நல வாரியங்களில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம... மேலும் பார்க்க

‘பெரம்பலூரில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்புகள்’

பெரம்பலூா் மாவட்டத்தில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில... மேலும் பார்க்க