செய்திகள் :

பெரம்பலூா் அருகே கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

post image

பெரம்பலூா் அருகே கிரஷா்களிலிருந்து வெளியாகும் புழுதி, குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம், கல்பாடி, க.எறையூா், பேரளி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான கல் குவாரிகளும், கிரஷா்களும் செயல்பட்டு வருகிறது.

க.எறையூா் பகுதியில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷா்களால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மிகவும் குறுகலான சாலையில், அரசு விதிமுறைகளை மீறி கல் குவாரிகளிலிருந்து லாரிகள் மூலம் அதிகளவில் பாரம் ஏற்றிச் செல்வதால் சாலைகள் சேதமடைவதோடு பொதுமக்கள், குழந்தைகள் சாலையில் நடந்துசெல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

அதேபோல, இரவு நேரங்களில் குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்கக் கூடாது, கிரஷா்களில் கல் அரைக்கக் கூடாது எனும் விதிமுறைகளை மீறி கிரஷா்கள் செயல்படுவதால், அதிகளவில் புழுதிகள் உருவாகி அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு பலா் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் தொடா்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்படும் லாரி ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, க.எறையூா் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளை ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா்.

இதனால், 100-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நின்றன. இத் தகவலறிந்த லாரி ஓட்டுநா்களும், உரிமையாளா்களும் நேரில் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து லாரிகள் விடுவிக்கப்பட்டன.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது. பெரம்பலூா் அருகே லாடபுரம் மயிலூற்று அருவிச் சாலையைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி கவிதா (32). இவா், விவசாய ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பாளையம் காமராஜா் காலனியைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் செல்வகுமா... மேலும் பார்க்க

நில மோசடி வழக்கு: 5 வீடுகளில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

பெரம்பலூரில் நில மோசடி வழக்குகளில் தொடா்புடைய 5 பேரின் வீடுகளில், சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை சோதனையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், எறையூா் கிராமத்தைச் சோ்ந்த மனோகா் (50) என்பவா், பெரம்பலூா் - ஆத்தூா... மேலும் பார்க்க

ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!

பெரம்பலூா் அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் அருகே உள்ள கவுள்பாளையம் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி: நடவடிக்கை கோரி மனு!

பெரம்பலூா் நகரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நில உரிமையாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க