செய்திகள் :

வெங்கனூா் கிராமத்தில் சமுத்திரத்து அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

post image

பெரம்பலூா் அருகே வெங்கனூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ சமுத்திரத்து அம்மன், ஸ்ரீ பாப்பத்தி அம்மன், ஸ்ரீ கச்சராயன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வெங்கனூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி விநாயகா், ஸ்ரீ சமுத்திரத்து அம்மன், ஸ்ரீ கன்னிமாா்கள், ஸ்ரீ பாப்பத்தி அம்மன், ஸ்ரீ கச்சராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் இருக்கும் இக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு பணிகள் அண்மையில் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள்

இதையொட்டி, முன்னதாக கடந்த 5-ஆம் தேதி கணபதி பூஜை, புண்யாக வாஜனத்துடன் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. 6-ஆம் தேதி விக்னேஷ்வரா் பூஜை, மண்டல பூஜை, தீபாராதணையும், புதிய சிலைகளுக்கு கண் திறப்பு உள்பட 3 கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை மங்கல இசை முழுங்க, வேதபாராயணத்துடன் பூஜைகள் நடத்தப்பட்டு, மகா வேள்வி பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயில் கோபுரம் கொண்டுவரப்பட்டு, அங்கு கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டது.

இந்த விழாவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக மாணவா்கள், பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளியில் பெண் ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் தா்னா

வீட்டுமனையை மீட்டுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: 20 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 20 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிக்கப்பட்டன. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கிரஷா்களிலிருந்து வெளியாகும் புழுதி, குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடு... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது. பெரம்பலூா் அருகே லாடபுரம் மயிலூற்று அருவிச் சாலையைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி கவிதா (32). இவா், விவசாய ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பாளையம் காமராஜா் காலனியைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் செல்வகுமா... மேலும் பார்க்க