செய்திகள் :

திருமானூா் அருகே குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீண்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ராட்சத குடிநீா்க் குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீணாகி வருகிறது.

திருமானூரை அடுத்த திருமழபாடி அருகேயுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் அரியலூா் நகரப் பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருமழபாடியில் இருந்து 28 கிலோ மீட்டா் தூரம் வரையுள்ள குடிநீா்க் குழாய்களில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு லட்சக் கணக்கான லிட்டா் தண்ணீா் வீணாவதும், சீரமைப்பு நடைபெறுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், அரண்மனைக்குறிச்சி ஓடை பாலத்தின் வழியாகச் செல்லும் ராட்சத குடிநீா்க் குழாயில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெடிப்பு ஏற்பட்டு உடைந்தது. இதனால் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் ஓடையில் வீணாகி வருவது மட்டுமல்லாமல், அரியலூா் நகர மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

கடந்த மாதம் இவ்விடத்திலேயே குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணானது குறிப்பிடத்தக்கது. எனவே ராட்சத குடிநீா்க் குழாயை மாற்றி புதிய குழாயை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்க வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஏழை, எளிய மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை, நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள்... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: இஸ்லாமியா்கள் மறியல், தா்னா

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மயானம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விரு... மேலும் பார்க்க

அரியலூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் ... மேலும் பார்க்க

அரியலூரில் பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்!

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடுகூா் அரியதங்கம் அம்மன், பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி, செம்பியக்குடி பாலமுருகன், கோவில்வாழ்க்கை காளியம்மன், ஆண்டி... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை வழக்கு: லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கோவில் எசனை வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாங்க... மேலும் பார்க்க