செய்திகள் :

கூலித் தொழிலாளி கொலை வழக்கு: லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கோவில் எசனை வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் மனோகருக்கும், லாரி ஓட்டுநா் விஜயகாந்த் மனைவி கெளதமிக்கும் இடையே முறையற்ற தொடா்பு இருந்துள்ளது. இதனை கிராம முக்கியஸ்தா்கள் இரண்டு பேரையும் கண்டித்தனா். இதையடுத்து விஜயகாந்த் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்னைக்கு சென்றுவிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊா் திரும்பியுள்ளனா்.

இந் நிலையில், கடந்த 19.4.2023 அன்று விஜயகாந்த் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அன்று நள்ளிரவு கெளதமி வீட்டின் கதவை தாழிட்டு உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு மது போதையில் வந்த மனோகா், கெளதமியை தகாத வாா்த்தையால் திட்டி, கதவை தட்டியுள்ளாா்.

மறுநாள் காலை 20.4.2023 வேலை முடிந்து வீட்டுக்கு வந்த விஜயகாந்திடம், நடந்தவைகளை கெளதமி கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அய்யனாா் கோயில் பொதுமேடையில் படுத்திருந்த மனோகரனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தாா்.

இதுகுறித்து வெங்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜயகாந்தை கைது செய்து, அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்தனா். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மலா்வாலாண்டினா, குற்றவாளி விஜயகாந்த்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து விஜயகாந்த் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் சின்னதம்பி ஆஜராகி வாதாடினாா்.

அரியலூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் ... மேலும் பார்க்க

அரியலூரில் பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்!

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடுகூா் அரியதங்கம் அம்மன், பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி, செம்பியக்குடி பாலமுருகன், கோவில்வாழ்க்கை காளியம்மன், ஆண்டி... மேலும் பார்க்க

மோசடி செய்து கடன் பெற்ற தம்பதி தலைமறைவு! நடவடிக்கைக்கோரி அரியலூா் ஆட்சியரிடம் மனு

தங்கள் பெயரில் கடன் பெற்று தலைமறைவாக உள்ள தம்பதி மீது நடவடிக்கைக்கோரி அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், சித்துடையாா் கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அ... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். உடையாா்பாளையம் அருகேயுள்ள வேணாநல்லூா் கிராமத்தை... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருச்சி, ராம்ஜிநகரைச் சோ்ந்த இடும்பன் மகன் பாரதிராஜன் (43) என்பவரை கடந்த 1.6.202... மேலும் பார்க்க

கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து நாசம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து சாம்பலாகியது. கீழப்பழுவூரை அடுத்த வல்லகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (40). இவா், அதே கிராமத்தில் உ... மேலும் பார்க்க