சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள வேணாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்மணி மகன் தமிழ்ச்செல்வன் (34). இவா், 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை அண்மையில் கைது கிளைச் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி சனிக்கிழமை உத்தரவிட்டதையடுத்து, தமிழ்ச்செல்வனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினா் கைது செய்து, அவரை திருச்சி மத்திய சிறைச் சாலையில் அடைத்தனா்.