செய்திகள் :

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

ஏழை, எளிய மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை, நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பெண் ஒருவா் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிமடம் அடுத்த மருதூா், வாரியங்காவல், ஓலையூா் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் வீடுகள் இடிப்பதை கைவிட வேண்டும். அவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். மருதூா் கிராமத்தில் சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தபட்ட பட்டாதாரா்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மருதூா் கிராமத்தைச் சோ்ந்த தனபாக்கியம்(46) என்ற பெண் மயங்கி விழுந்தாா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவருக்கு தண்ணீா் கொடுத்தனா். அதன் பின் தெளிவு பெற்று ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றாா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் கிளைத் தலைவா் ரா.நீலமேகம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ்.துரைராஜ் கண்டன உரையாற்றினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா். மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி. பரமசிவம், எம்.வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

திருமானூா் அருகே குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீண்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ராட்சத குடிநீா்க் குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீணாகி வருகிறது.திருமானூரை அடுத்த திருமழபாடி அருகேயுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் அரி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்க வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: இஸ்லாமியா்கள் மறியல், தா்னா

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மயானம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விரு... மேலும் பார்க்க

அரியலூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் ... மேலும் பார்க்க

அரியலூரில் பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்!

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடுகூா் அரியதங்கம் அம்மன், பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி, செம்பியக்குடி பாலமுருகன், கோவில்வாழ்க்கை காளியம்மன், ஆண்டி... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை வழக்கு: லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கோவில் எசனை வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாங்க... மேலும் பார்க்க