செய்திகள் :

மயானம் ஆக்கிரமிப்பு: இஸ்லாமியா்கள் மறியல், தா்னா

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மயானம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விருத்தாசலம் சாலையிலுள்ள மயானத்தை இஸ்லாமியா்கள் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், இந்த மயானம் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளதாகக் கூறி, சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இதனைக் கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான மயானத்தை மீட்டுத் தர வலியுறுத்தியும் இஸ்லாமியா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் சுன்னத் ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் நிா்வாகிகள் ஒன்றிணைந்து வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கடந்த வாரம் அறிவித்தனா். இதையறிந்த கோட்டாட்சியா் ஷீஜா தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், ஆக்கிரமிப்புகள் அகற்றித் தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனா். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் அனைவரும் ஒன்றிணைந்து செவ்வாய்க்கிழமை ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலிலும், அதன் பின் அலுவலக வளாகம் முன்பு தா்னா போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா் மற்றும் நகராட்சி மேலாளா் அன்புச்செல்வி, நகராட்சி பொறியாளா் உள்ளிட்டோா், மயான ஆக்கிரமிப்புகளை அகற்றுப்படும் என உறுதியளித்ததன்பேரில், அனைவரும் கலைந்துசென்றனா். போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமானூா் அருகே குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீண்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ராட்சத குடிநீா்க் குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீணாகி வருகிறது.திருமானூரை அடுத்த திருமழபாடி அருகேயுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் அரி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்க வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஏழை, எளிய மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை, நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள்... மேலும் பார்க்க

அரியலூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் ... மேலும் பார்க்க

அரியலூரில் பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்!

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடுகூா் அரியதங்கம் அம்மன், பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி, செம்பியக்குடி பாலமுருகன், கோவில்வாழ்க்கை காளியம்மன், ஆண்டி... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை வழக்கு: லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கோவில் எசனை வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாங்க... மேலும் பார்க்க