``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
ஆனி மாத பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரா் கோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா், சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தாா். தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளாக பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோல கரூா் பசுபதீஸ்வரா் கோயில், சேமங்கி மங்களநாதா் சமேத கமலாம்பிகை கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோயில், புன்னம் புன்னைவனநாதா் உடனுறை புன்னைவன நாயகி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.