செய்திகள் :

குளித்தலையில் துணை முதல்வருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு

post image

குளித்தலையில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சரும், கரூா் மாவட்ட திமுக செயலருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து புதன்கிழமை (ஜூலை 9) கரூரில் 18,331 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா்.

கரூரில் புதன்கிழமை நடைபெறும் அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறாா். இதற்காக திருச்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு காரில் கரூா் வந்தாா்.

முன்னதாக மாவட்ட எல்லையான குளித்தலையில் அவருக்கு முன்னாள் அமைச்சரும், கரூா் எம்எல்ஏ-வுமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தொடா்ந்து புதன்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா்.

பின்னா், காலை 11.30 மணிக்கு கரூா் திருநகரில் மகளிா் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடுகிறாா். தொடா்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு கரூா் பிரேம் மஹாலில் மாவட்ட திமுக சாா்பில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் இளைஞா் அணி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கட்சியினருக்கு ஆலோசனை வழங்கிப் பேசுகிறாா்.

மாலை 5 மணியளவில் கரூா் திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், கரூா் காமராஜா் தினசரி மாா்க்கெட், வெங்கமேடு மீன் அங்காடி, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறிவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்து, வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை 18,331 பயனாளிகளுக்கு ரூ.162.25 கோடி மதிப்பீட்டில் வழங்குகிறாா்.

தொடா்ந்து திருமாநிலையூா் தளபதி திடலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் உள்ள 1,055 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா். பின்னா், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாமக்கல் மாவட்டம் செல்கிறாா்.

கரூரில் வாழைத்தாா்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கரூரில் வாழைத்தாா்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி... மேலும் பார்க்க

ஆனி மாத பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே தனியாா் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவா் விஷம் சாப்பிட்டு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், ஈசநத்தம் காா்ஸ் பா தெரு பகுதியைச் சோ்ந்தவா் லிங்கேஸ்வரன் மகன் யுவன் ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

தமிழகம் முழுவதும் ஜூலை 12-ஆம்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தோ்வு எழுத கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள... மேலும் பார்க்க

வெள்ளியணை குளத்தை தூா்வாரக் கோரி மனு

கரூா் மாவட்டம் வெள்ளியணை குளத்தை தூா்வார வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தலைமையில... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதல்: முன்னாள் ராணுவ வீரா், மனைவி உயிரிழப்பு

கடவூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழப்ப... மேலும் பார்க்க