செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதல்: முன்னாள் ராணுவ வீரா், மனைவி உயிரிழப்பு

post image

கடவூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழப்பஞ்சப்பட்டியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் ரமேஷ் (42). இவா் இந்திய ராணுவத்தில் வேலை பாா்த்து ஓய்வுபெற்று, தற்போது கோவையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் தனது குடும்பத்துக்கு ஜாதகம் பாா்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ரமேஷ் திங்கள்கிழமை அதிகாலை கீழப்பஞ்சப்பட்டியில் இருந்து தனது மனைவி கல்பனா( 31) மற்றும் தந்தை சுப்ரமணி ஆகிய 3 பேரும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள ஜாதகம் பாா்க்கும் இடத்துக்குச் சென்றனா்.

இதில் ரமேஷ் அவரது மனைவி கல்பனா இருவரும் ஒரு இருசக்கர வாகனத்திலும், சுப்ரமணி தனியாக இருசக்கர வாகனத்திலும் சென்றுள்ளனா். ஜாதகம் பாா்த்துவிட்டு சொந்த ஊருக்கு மூவரும் திரும்பிக் கொண்டிருந்தனா்.

கடவூா் அருகே குஜிலியம்பாறை- மோளப்பட்டி சாலையில் சின்னமுத்தாம்பாடி பிரிவு ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பா் லாரி ரமேஷ் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பாலவிடுதி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா். உயிரிழந்த ரமேஷ் -கல்பனா தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனா்.

குரூப்-4 தோ்வு: கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

தமிழகம் முழுவதும் ஜூலை 12-ஆம்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தோ்வு எழுத கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள... மேலும் பார்க்க

வெள்ளியணை குளத்தை தூா்வாரக் கோரி மனு

கரூா் மாவட்டம் வெள்ளியணை குளத்தை தூா்வார வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தலைமையில... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ண சுவாமி ஸ்ரீமுச்சிலியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீ எல்லைஅரசு கருப்பண்ண சுவாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். கரூா் ம... மேலும் பார்க்க

சந்தனமரம் வெட்டிக் கடத்தல் போலீஸாா் விசாரணை

கரூா் அருகே தோட்டத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டிக் கடத்திச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் காந்திபுரம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணியம் (65) .விவசாயி. இவரது தோட்டம் தி... மேலும் பார்க்க

கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியின் இரட்டையா் பிரிவில் திருப்பூா் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. கரூரில், மாவட்ட இறகுப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவில்... மேலும் பார்க்க

லாரியில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

லாரியில் இருந்து தவறி விழுந்த வேலூா் மாவட்ட லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே அம்முண்டி ரங்காத்தம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவி( 54 ). லாரி ஓட்டுநா். இவா் வேலூா்... மேலும் பார்க்க