செய்திகள் :

``ஆட்சியாளர்களுக்கு பயம்; காவல்துறையை ஏவி எங்களை தடுக்கின்றனர்..’’ - கொந்தளிக்கும் வேலூர் அதிமுக

post image

வேலூரில், `கடந்த ஜூன் 25-ம் தேதி முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட அரசு பென்ட்லேண்ட் பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை’ எனக் குற்றம்சாட்டி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படாத நிலையிலும், அ.தி.மு.க-வினர் இன்று காலை ஆர்ப்பாட்ட பகுதிக்குச் செல்ல முயன்றனர்.

முன்கூட்டியே குவிக்கப்பட்ட காவல்துறையினர்...

ஆனால், முன்கூட்டியே பேரிகார்டுகளை தடுப்புகளாக அமைத்து எஸ்.பி மதிவாணன் தலைமையிலான காவல்துறையினர் குவிந்திருந்தனர். அ.தி.மு.க கரைவேட்டி கட்டிக்கொண்டு சாலையின் இருபுறமும் வந்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மடக்கிப் பிடித்து தயாராக நிறுத்தப்பட்டிருந்த வேன்களில் ஏற்றிச் சென்றனர்.

கைது நடவடிக்கையைத் தெரிந்தும் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, அமைப்புச் செயலாளர் வி.ராமு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ``எந்த வேலையும் நடைபெறாமல் அரைகுறையாக மருத்துவமனையைத் திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டிக்கின்ற வகையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்தோம். ஆனால், காவல்துறை எங்களை மக்கள் பணி செய்யவிடாமல், கைது செய்கிறது.

கைது செய்யப்பட்ட அ.தி.மு.க-வினர்

முன்கூட்டியே, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தும், `மேலிடத்து பிரஷர்’ எனச் சொல்லி, காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இது மருத்துவம் சம்பந்தப்பட்ட விவகாரம். காவல்துறையினருக்கும் சேர்த்துதான் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு ஜுரம் வந்துவிட்டது. அதனால்தான் காவல்துறையினரை ஏவி எங்களை ஆர்ப்பாட்டம் நடத்தவிடாமல் தடுக்கின்றனர்’’ என்றார் கொதிப்போடு.

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள சித்ரா மஹாலில் தங்க வைத்திருக்கின்றனர்.

கரூர்: ``என் குரல் பெண் குரல்போல இருப்பதால், பாலியல் சீண்டல் செய்கிறார் ஆசிரியர்'' - மாணவர் புகார்

கரூரில் பெண் குரல் போல இருக்கும் மாணவரை பள்ளி ஆசிரியர் கிண்டல் செய்து பாலியல் சீண்டல் செய்வதாக பாதிக்கப்பட்ட அம்மாணவர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார்.10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், தன... மேலும் பார்க்க

Andhra: ``அவர்க்கு பைத்தியம் பிடிச்சிருச்சு'' - பவன் கல்யாண் மீது முன்னாள் அமைச்சர் ரோஜா காட்டம்

ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆந்திர முன்னாள் அமைச்சராக இருந்தவர் ரோஜா. கடந்த 2024 ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சி ஆட்... மேலும் பார்க்க

20 பாட்டில் விஷ முறிவு மருந்து; 72 மணி நேர போராட்டம்-11 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பட்லுார், சொக்கநாத மணியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர். இவரது மகன் ஜெயசூர்ய குமார் (11).அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூன் 26-ஆம் ... மேலும் பார்க்க

சென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவு; அச்சத்தில் மக்கள் - ஸ்பாட் விசிட்

சென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெரு... மேலும் பார்க்க

வேலூர்: `அது, ஜி.ஹெச் இல்லை... வெற்றுக் கட்டடம்’ - கொதிக்கும் அதிமுக; மறுக்கும் திமுக

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில், ரூ. 197.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஏழு தளங்களுடன்கூடிய பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டடம் பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ... மேலும் பார்க்க

மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள்

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் அருகில் ரேவ்தந்தா என்ற இடத்தில் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இதனை இந்திய கடற்படையினர் ரேடார் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்த... மேலும் பார்க்க