அரிமளம் பகுதிகளில் நாளை மின்தடை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 10) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக உதவி செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் அறிவித்துள்ளாா்.
இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூா், வெட்டுக்காடு, பொந்துப்புளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப் பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூா், கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி.