நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் கல்லுக்குள் ஈரம் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அருணா, கல்லுக்குள் ஈரம், மகரந்தம், சிவப்பு மல்லி,
நீதி பிழைத்தது, பெண்ணின் வாழ்க்கை, நாடோடி ராஜா, ஆனந்த ராகம், சட்டம் சிரிக்கிறது,முதல் மரியாதை, கரிமேடு கருவாயன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அருணா.
இவருக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் கணவர் தொழிலதிபர் மோகன் குப்தாவுடன் வசித்து வருகிறார்.
தொழிலதிபர் மோகன் குப்தா வீடு உள்கட்டமைப்பு அலங்காரப் பொருள்கள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நிறுவனம் தொடர்பான புகாரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 4 பேர் புதன்கிழமை காலை 7 மணி முதல் நீலாங்கரையில் உள்ள வீடு, அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.