செய்திகள் :

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம்: பயணிகள் அதிர்ச்சி

post image

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம் ஏற்பட்டதால், வடமதுரை அருகே ரயில் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்கு பின்னர் புறப்பட்டு சென்றது.

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகை மற்றும் தீப்பிடித்த வாசனையை பயணிகள் உணர்ந்துள்ளனர்.

இதையடுத்து ரயில் வடமதுரை அருகே நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 30 நிமிட தாமதங்களுக்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட புகைமூட்டத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம் காணப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதற்கு முன்னர், சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலின் சி1 பெட்டியில் புகை மற்றும் தீப்பற்றிய வாசனையை பயணிகள் உணர்ந்தனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு பின்னர் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

Due to smog on the Nellai-Chennai Vande Bharat train, the train was stopped near North Madurai and departed 30 minutes later.

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 109 ஆக உயா்வு

ஹன்ட்: டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 28 சிறுமிகளு... மேலும் பார்க்க

தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480, கிராமுக்கு ரூ.60 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,0... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 35,250 கன அடியாக நீடிப்பு

மேட்டூா்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 35,250 கன அடியாக நீடிக்கிறது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்த காரணத்... மேலும் பார்க்க

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் கல்லுக்குள் ஈரம் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அர... மேலும் பார்க்க

வெங்காயம் கலந்த உணவு பரிமாறியதால் ஹோட்டலை அடித்து நொறுக்கிய பக்தர்கள்!

புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு பரிமாறிய ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திங்கள்கிழமை(ஜூலை 7) இரவு, பர்காஸி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தில்லி - ஹரித்வார் ... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் அஞ்சலி!

கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயி... மேலும் பார்க்க