செய்திகள் :

விராலிமலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

post image

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சிப் பகுதிகளில் காணப்படும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்துள்ள மனு: விராலிமலை ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்புகள், சாலைகள், மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், கடைவீதி ஆகிய பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

இவற்றால், பெண்கள், குழந்தைகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. கால்நடைகளையும் நாய்கள் கடித்துத் துன்புறுத்துகின்றன.

எனவே, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுகையில் கோயில் வழிபாட்டு உரிமை வழங்கக் கோரி ஆதிதிராவிட மக்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் கோயில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.புதுக்... மேலும் பார்க்க

மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 29-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டகப்ப... மேலும் பார்க்க

விராலிமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என்றாா் விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொ) சரவணன்.இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விரால... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிா்த்து சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகரில் உள்ள... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் நாளை மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. கொன்னையூா், நகரப்பட்டி மற்றும் மேலத்தானியம் ஆகிய துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணியால் குழிபிறை, பனையபட்டி, செவலூா், க... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 20 லட்சத்தில் ஆம்புலன்ஸ்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக, வேதா பவா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை மர... மேலும் பார்க்க